Friday, June 15, 2012

வாசகர் கடிதம் என்ற பெயரில் அவதூறு பரப்பும் தினமலம்





http://www.dinamalar.com/News_detail.asp?Id=486558



மதுரை: ""நித்யானந்தா தான் என் வாரிசு என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை,'' என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்.








கடந்த ஏப்ரலில், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில், நித்யானந்தாவை சந்திக்கச் சென்ற மதுரை ஆதீனம், "சிவனும், பார்வதியும் சொன்னதன் பேரில், நித்யானந்தாவை வாரிசாக நியமிக்கிறேன்' என்று கூறி, ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி, சர்ச்சைகளுக்கு, "பிள்ளையார் சுழி' போட்டார். இதன் பிறகு தொடர்ந்து சர்ச்சைகள் எழுகின்றன.







முதல் சந்திப்பு: மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஓலைச்சுவடி மற்றும் நாடி ஜோதிடம் பார்த்ததில், நெல்லையைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் சுவாமிநாதனை எட்டு வயதிலேயே இளைய ஆதீனமாக நியமிக்க, 1996ம் ஆண்டு மதுரை ஆதீனம் அருணகிரி முடிவு செய்தார். எட்டு வயதில் மகனை சாமியாராக பார்க்க பெற்றோர் விரும்பவில்லை என்பதால், 16 வயதில், 2004ல், இளைய ஆதீனமாக சுவாமிநாதனை ஆதீனம் நியமிக்க அவர்கள் சம்மதித்தனர். சுவாமிநாதன் இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்கு பின், ஆசீர்வாதம் வாங்குவதற்காக மதுரை ஆதீனத்தை முதன் முறையாக மடத்தில் நித்யானந்தா சந்தித்தார்.







கண்டித்த ஆதீனம்: அப்போது, நித்யானந்தா ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். "தீட்சை பெறாமல் இம்மாலையை அணியக் கூடாது' என ஆதீனம் கண்டித்தார். பின், ஆசீர்வதித்து நித்யானந்தாவை அனுப்பிய ஆதீனம், ஒரு மாதத்திலேயே "பெற்றோர் பாசம் உள்ள இவன் துறவறத்திற்கு ஏற்ற ஆள் இல்லை' என்றுக் கூறி, சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்தார். தற்போது சுவாமிநாதன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து, ஐதராபாத்தில் வேலை செய்கிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.







இதுகுறித்து, மதுரை ஆதீனம் நமது நிருபருக்கு அளித்த பேட்டி:







* 2004ல் நித்யானந்தா உங்களை சந்தித்து, இளைய ஆதீனமாக பொறுப்பேற்க முயற்சித்தாரா?







அவர் சந்தித்தது உண்மை. ஆனால், அப்போது அவரை வாரிசாக நியமிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.







* நித்யானந்தாவை நீங்கள் பதவி நீக்கம் செய்யப் போவதாக கூறுகிறார்களே?







அவர் (நித்யானந்தா) இன்னும் எனது வாரிசாக தான் நீடிக்கிறார்.







* பெங்களூரு பிடதி ஆஸ்ரம பிரச்னை குறித்து...







அவர் தான் ஜாமினில் வந்துவிட்டாரே. என்னை சந்திக்க மதுரை வந்து கொண்டிருக்கிறார்.







* இவ்வளவு சர்ச்சைக்கு பிறகும், நித்யானந்தா தான் வாரிசு என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?







ஆம். எந்த மாற்றமும் இல்லை என்றார்.
















வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.



1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.



2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.



3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.



4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.



மேலும்வாசகர் கருத்து (40)



Rajaraman V Raman - Chennai,இந்தியா 2012-06-15 19:53:12 IST Report Abuse

நித்தி தான் சரியான சாய்ஸ்.... ஆதரிப்பதற்கு நம்ம மதுரை ஆதீனம் இருக்கிறாரே.... ம்ம்ம்ம் ரஞ்சிதா முதல் குடி மகள்.... ஆரம்பமாகட்டும் பாட்டும் பரதமும்... கொட்டட்டும் மேளம்.. நாதஸ்வரம்..... காம களியாட்ட மாளிகையாக ஜொலிக்கட்டும் ஜனாதிபதி மாளிகை....Rate it: 4 5 Share this commentReply Cancel



sasikanikannan - ramanathapuram,இந்தியா 2012-06-15 18:01:16 IST Report Abuse

சைவம் தழைக்க உருவாக்கப்பட்ட ஆதின மடத்தில் கலவியில் புரண்ட மனிதனை சேர்த்த அருணகிரிநாத உனக்கு அந்த சொக்கனும்,மீனாட்சியும், திருஞானசம்பந்தரும் நல்ல புத்தி கொடுக்க வேண்டுகிறேன்.Rate it: 2 4 Share this commentReply Cancel



kpm - ajman,ஐக்கிய அரபு நாடுகள் 2012-06-15 17:11:16 IST Report Abuse

இந்த ஆளை ஆதினம் ஆக்கியவரை சொல்லணும். லூஸ் பயல ஆதீனம் ஆக்கினா அது இன்னொரு கிறுக்கு பயலதான் கொண்டுவரும்Rate it: 5 4 Share this commentReply Cancel







rajkumar - chennai,இந்தியா 2012-06-15 14:31:13 IST Report Abuse

நெஜமாவே இவரு வெள்ளந்தியா இல்ல இவரையும் மெரட்டி வச்சுருக்கன்களா? பற்று இல்லாத ஒரு துறவி பென்ஸ்ல போறாரு, பற்றில்லாத இன்னொரு துறவி பல கோடிகள் சம்பாதிக்கிராரு. நம்ம நாட்ல யோசிச்சு மண்டகாஞ்சு போயி சாப்ட்வேர் எழுதுறவன் மாசம் நாப்பதாயிரத தாண்டமாட்றான். ஒரு வேள நமக்கு தான் பொழக்க தெரியல்லையோ? என்ன எளவுடா இது?Rate it: 3 4 Share this commentReply Cancel





Roger Moore - pondychery,இந்தியா 2012-06-15 14:08:40 IST Report Abuse

குருடின அறியதா குருவை கொள்வர் குருடின அறியும் குருவை கொள்ளார் குருடும் குருவும் குருட்டு ஆட்டம் ஆடி குருவும் குருட்டும் குலி விலிமரா இது திருமூலர் மந்திரம். நீயும் fraud நிதியும் fraud இருவருக்கும் கடவுள் கொடுப்பார் ஆப்பு.Rate it: 2 4 Share this commentReply Cancel







H Narayanan - Hyderabad,இந்தியா 2012-06-15 13:09:49 IST Report Abuse

வேற வழி.. முடிவை மாத்தினா, நித்தி கொடுத்த 1 கோடி ரூபாயை திருப்பி தர வேண்டும்.. இவரு வேற உணர்ச்சி வசப் பட்டு நித்தி ஆசிரமத்தில் உள்ள பெண்களோடு சேர்ந்து ஆடியிருக்கிறார்.. அதுல என்ன வீடியோ இருக்கோ...Rate it: 2 3 Share this commentReply Cancel



saravanan - Dares Salaam,தான்சானியா 2012-06-15 12:57:53 IST Report Abuse

மொதல்ல இந்த ஆளை மாத்தணும்..........Rate it: 3 14 Share this commentReply Cancel



vasudevan - chennai ,இந்தியா 2012-06-15 12:45:19 IST Report Abuse

இவரை பார்த்தால் இவரோட சி டி நித்திகிட்டே மாட்டிகிட்டோன்னு தோணுது. அதை வச்சு ப்ளாக்மெயில் பண்ணுறானோ?Rate it: 3 5 Share this commentReply Cancel





ganapati sb - coimbatore,இந்தியா 2012-06-15 11:49:26 IST Report Abuse

உலக மக்களை ஆன்மிகம் மட்டுமே இணைக்க முடியும். குஜராத்திகளுக்கு ஒரு ஸ்வாமிநாராயண், தெலுங்கர்களுக்கு ஒரு சத்யசாய், மலையாளிகளுக்கு ஒரு அம்ரிதானந்தமாயி, உலகத்தமிழர்கள் மற்றும் அனைவருக்கும் மதுரை ஆதினம் நித்யானந்தரால் இணைப்புபாலம் ஆகிறது. ஏற்கனவே அமெரிக்க ஐரோப்பா ஆப்ரிக்கா வளைகுடா சிங்கப்பூர் மலேசிய ஆஸ்திரேலியா கனடா மற்றும் இலங்கையிலும் உள்ள தமிழர்கள் பலபேர் தியானபீடத்தில் பக்தர்களாக உள்ளனர். வேதக்கல்வி அநதந்த நாடுகளில் பரவவும் அதனால் அந்தந்த நாடுகளில் தமிழர் மரியாதை உயரவும் இது வழி வகுக்கும். வாழ்க மதுரை ஆதினம். வளர்க அவரின் உறுதி.Rate it: 5 6 Share this commentReply Cancel



rajarajan - bangalore,இந்தியா 2012-06-15 11:35:43 IST Report Abuse

பிடதி ஆசிரமத்தில் வெளிநாட்டு பெண்களோடு ஆதீனம் உல்லாசமாக இருந்ததை நித்தியானந்தா வீடியோ எடுத்து வைத்துள்ளதால்தான் நித்தியானந்தாவின் சொற்படி ஆதீனம் கரணம், பல்டி அடிப்பதாக எப்போதோ படித்தது. இது உண்மை என்றால் ஆதீனமும் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்.Rate it: 3 4 Share this commentReply Cancel



Mani S Srinivasan - Chennai,இந்தியா 2012-06-15 10:58:39 IST Report Abuse

இந்த "இளைய ஆதீனம்" போஸ்ட் மாதிரி "துணை இளைய ஆதீனம்" போஸ்ட் ஏதாவது எனக்கு கெடைக்குங்களா சாமீ ??Rate it: 4 1 Share this commentReply Cancel





arunvijay - virudhunagar,இந்தியா 2012-06-15 10:46:45 IST Report Abuse

தினமலர் பத்திரிக்கை நடுநிலை நாளிதழ் என்ற எண்ணம் எனக்குள் எப்பொழுதும் இருந்தது, ஆனால் நித்யானந்தா வை பற்றிய உங்கள் செய்திகளை உங்கள் கருத்துக்களை தான் நீங்கள் செய்தியாக மக்களிடம் திணிக்கிறீர்கள், உண்மையான செய்திகளை மட்டும் போடுங்கள், ஏன் செய்தியுடன் உங்கள் கருத்துக்களையும் மக்களிடம் திணிக்கிறீர்கள், "ஆதீனம் பிடிவாதம்" என்ற வார்த்தையுள் இருந்தே தெரிகின்றது நீங்கள் உங்கள் எண்ணங்களை திணிக்கின்றீர்கள் என்பது, நீதிபதி கு பிறகு பத்திரிகை தான் நடுநிலையாக செய்தியை வெளியிட வேண்டும், மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நீங்கள் உங்கள் முடிவை மக்களிடம் திணிக்க கூடாது, இனியாவது நடுநிலையாக செய்தியை மட்டும் வெளிட்டு தினமலர் நடுநிலை என்ற என் நம்பிக்கையை நிலை நாட்டுவீர்கள் என்று நம்புகிறேன், பார்போம், நன்றிRate it: 5 2 Share this commentReply Cancel



Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா 2012-06-15 10:44:06 IST Report Abuse

எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரு, ரொம்ப நல்லவரா இருப்பாரோRate it: 1 1 Share this commentReply Cancel



Ezhilarasi B - Chennai,இந்தியா 2012-06-15 10:26:10 IST Report Abuse

இளைய ஆதீனத்த பத்தி சொன்ன சிவனும் பார்வதியும் அந்த இளைய ஆதீனத்துக்கும்,இவருக்கும் இப்படி எல்லாம் பிரச்சனை வரும்னு சொல்லாம விட்டுட்டாங்களே.. இனியாவது திருந்தப்பாருங்க.......Rate it: 2 4 Share this commentReply Cancel



Raman C Iyer - Hyderabad,இந்தியா 2012-06-15 10:18:57 IST Report Abuse

சாமி கும்பிட வேண்டும்தான் அதற்காக மனிதன் தன்னைப்போன்ற மனிதனையே எப்படி சாமி என்று கூறிக்கொள்வது நியாயம்? இவர்கள் என்ன உண்மையான துறவிகளா? இந்து மதத்தை கிண்டல் செய்யும் மு க போன்றோர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் அல்வா சாபிடுவது போன்று தான் அமையும். ஒன்றும் இல்லா நார வாய்க்கு மென்று உண்ண கிடைத்த அவுல் ... இனிமேலாவது சக மனிதனை கும்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள் என் நண்பர்களே. இது உங்களுக்கும் நீங்கள் சார்ந்து இருக்கும் புனிதமான மதத்தையும் காக்கும்.Rate it: 2 4 Share this commentReply Cancel



Neelaambari Rani - Kumbakonam,இந்தியா 2012-06-15 09:44:09 IST Report Abuse

உமக்கு நித்தி வேண்டுமா? ரஞ்சி வேண்டுமா? ஓப்பனா ஒன்னு சொல்லட்டுமா? ரஞ்சிதான் வேணும்னா "நீர் தாங்கமாட்டீர் சாமி"Rate it: 3 4 Share this commentReply Cancel



Ratnasuamy - nsembilan,மலேஷியா 2012-06-15 08:43:47 IST Report Abuse

ஆன்மீகத்தில் ஈடுபடுபவன் தனிமையை விரும்புவான். மக்களோடு மக்களாக இருந்துக்கொண்டு சொத்துக்களை சேர்த்துக்கொண்டு வாழ்க்கையை சுகமாக அனுபவிப்பவன் எப்படி மக்களுக்கு போதனை செய்ய முடியும். இந்த மக்கள் எதை நம்பி இவர்கள் பின்னால் செல்கிறார்கள்?Rate it: 0 4 Share this commentReply Cancel



K RAJARAM I R S (Retd0 - TIRUNELVELI,இந்தியா 2012-06-15 07:55:47 IST Report Abuse

The comments show the grievances of the people. however the cause of all degeneration of conduct and self -propulsion of the country lie with the greedy as well as the fear-stricken MEDIA . To day we have no media who dissect any issue on neutral style . That is why knowledge of the people are filled with the news of immoral and criminal activities ofthe lower order who have no defense. Does not the news paper aware of the nature of cases filed in USA on samiyar-clad? ""Nenjil uramum intri nermai thiranum intri panamum illamal manamum illamal ediyo ezhudi edayio visual aga katti natkalai nagarthum anradankaychigalaga agivitta "&39 MEDIA IS TO BE BLAMED.Rate it: 7 2 Share this commentReply Cancel



Swamy Kumar - New York,யூ.எஸ்.ஏ 2012-06-15 07:35:36 IST Report Abuse

எப்படி பேசினாலும் உமக்கு ரஞ்சிதா பங்கு கிடைக்காது.Rate it: 61 6 Share this commentbala thangavel - mysore,இந்தியா 2012-06-15 14:00:00 IST Report Abuse

கால் அமுக்க கூடவா? கண்ணுக்கு எட்டியது கால் அமுக்க எட்டவில்லைன்னு சொல்ல வாரீகளா?...

Rate it: 2 0 Share this comment Reply Cancel



dhanasekaran - Toronto ,கனடா 2012-06-15 07:27:51 IST Report Abuse

கூடா நட்பு கேடாய் முடியும்... இதற்கு தலைவர் ஒரு சிறந்த முன் உதாரணம்..Rate it: 26 4 Share this commentReply Cancel



thamizh - aruppukottai,இந்தியா 2012-06-15 07:13:50 IST Report Abuse

இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்க இருக்கிறதோ... சில பேர் பட்டும் திருந்தாத மாக்கான்கள் ......Rate it: 21 11 Share this commentReply Cancel



T.R.Radhakrishnan - mumbai ,இந்தியா 2012-06-15 06:37:23 IST Report Abuse

சொக்கா..... நித்தி இவருக்கு என்ன சொக்குப்பொடி போட்டான்னு தெரியலையே.Rate it: 24 13 Share this commentramanathan - singapore,சிங்கப்பூர் 2012-06-15 14:42:21 IST Report Abuse


சின்ன விஷயம் தான். பெருசு பிடதி போனதும் ரஞ்சிதா விருந்து கொடுத்தாங்களாம் .... அந்த விருந்த நம்ப நித்தி வழக்கம்போல படம் புடுச்சாராம்.... பிறகு என்ன பெருசு ஓவர் .... விருந்து என்னனு மட்டும் கேட்டுராதீங்க .அதெல்லாம் வந்து .........இம் இம் இம் .....


Rate it: 1 3 Share this comment Reply Cancel



adithyan - chennai,இந்தியா 2012-06-15 06:30:46 IST Report Abuse

இவன் மடத்தை விற்று விட்டான். வாங்கினவன் திருப்பி கொடுப்பானா? இதில் அந்த மடத்தை சார்ந்த பக்தர்கள் ஏசாமல் இருந்தால் அந்த பக்தர்களையும் அடிமைகளாக விற்றுவிடுவான். இப்போதாவது அந்த பக்தர்கள் விழித்து கொள்வார்களா?Rate it: 27 7 Share this commentReply Cancel



v.sundaravadivelu - Tiruppur,இந்தியா 2012-06-15 05:43:39 IST Report Abuse

நம்ம மாதிரி ஆளுங்க தான் சிக்குனா காலத்துக்கும் ஜெயில்ல கெடக்கவேண்டி இருக்கு.. இவனுங்க எல்லாம் ஈசியா ஜாமீன் , முன்ஜாமீன், அப்டி இப்டின்னு வெளிய வந்து வெளுத்து வாங்கராணுக... மறுபடி பேட்டி பார்த்தீங்கன்னா மீடியாக்களில் ரொம்பி வழிய உடுராணுக... அதப் படிச்சுட்டு ஜாமீன் கொடுத்த ஆளுங்க ரிலீஸ் பண்ணிடிறாங்க.. அதையெல்லாம் விட இவனுக பெரிசா டிப்ஸ் கொடுத்து ரிலீஸ் ஆயிடராணுக...Rate it: 16 10 Share this commentReply Cancel



Samy Chinnathambi - rayong,தாய்லாந்து 2012-06-15 05:05:16 IST Report Abuse

நீங்க நித்தியானந்தா தான் வேணும்னு அடம் பிடிக்கிறீங்களா? இல்லை ரஞ்சிதா தான் வேணும்னு அடம் பிடிக்கிறீங்களா சாமி? இதுதான் என் டவுட்டு.Rate it: 106 11 Share this commentbala thangavel - mysore,இந்தியா 2012-06-15 14:02:11 IST Report Abuse

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?.... எனக்கு ரெண்டும் வேணும்......

Rate it: 1 0 Share this comment suji dsouza - melbourn,ஆஸ்திரேலியா 2012-06-15 16:36:45 IST Report Abuse

அப்படி என்ன தான் இருக்கிறது ரஞ்சிதாவிடம்?...

Rate it: 1 0 Share this comment Reply Cancel



Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர் 2012-06-15 04:47:08 IST Report Abuse

ஆன்மீகம் என்பது வேறு - துறவறம் வேறு. இரண்டும் பெரும் வியாபாரமாக ஆகி விட்டன. யோகா குரு இராம்தேவ் உட்பட பலர் பெரிய அளவில் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். துறவறம் மேற்க்கொள்கிறவர்கள் பெண்கள் மற்றும் தங்க நகைகளில் மீது அதிக பற்று உள்ளவர்களாக இருக்கிறார்கள்.Rate it: 50 35 Share this commentReply Cancel



K.vijayaragavan - chennai,இந்தியா 2012-06-15 04:19:33 IST Report Abuse

இவனுக்கும் நேரம் சரி இல்லை. இவனும் ஒரு போலி துறவி தான். புனிதமான சைவ மடங்களுக்கு இது போதாத காலம் போலும். இவனை போன்றவர்கள் மடாதிபதிகளாக வந்து சந்தி சிரிக்கிறது.அந்த நித்தி இவனுக்கு காலம் போன காலத்தில் பெண்களை காட்டி மயக்கி இருக்கிறான். அந்த மயக்கத்தில் இந்த கிழம் ஏதேதோ உளறுகிறது. நித்தியை விசாரிக்க வேண்டிய முறைப்படி விசாரித்தால் பல பெரிய பூதங்கள் கிளம்பலாம். தேவையில்லாமல் இந்த கிழம் நித்தியை பிடித்துக்கொண்டு தொங்குகிறது. அவனால் தேவையில்லாமல் விவகாரங்களில் மாட்டிக்கொண்டு விழிக்கப்போகிறது. வயதான காலத்தில் இந்த கிழத்திற்கு ஏழரை சனி பிடித்திருக்கிறது போலும். அதனால் தான் உளறுகிறது. இதுவரை இந்த கிழம் ஆடிய ஆட்டங்களுக்கு நித்தி மூலம் இறைவன் தண்டனை அளிக்கப்போகிறான். தப்பு செய்து விட்டு யாரும் தப்ப முடியாது. வெகு விரைவில் இந்த கிழமும் உள்ளே போகும் நிலை வரும். அப்போது தெளியும் நித்தி மயக்கம்.Rate it: 106 17 Share this commentReply Cancel



Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர் 2012-06-15 03:37:50 IST Report Abuse

இந்த மதுரை ஆதீனமே ஓர் தகுதி இல்லாதவர்..திமுக உறுப்பினர்.. பத்திரிக்கை நிருபராக அந்த கட்சிக்கு ஜிங்சா தட்டிகொண்டிருந்தவரை எப்படியோ ஆதீனமாக்கி அதற்குள்ள சொத்துக்களை அனுபவித்தனர் திமுகவினர். இவரே ஓர் தள்ளுபடி கேஸ்..இவரிடம் பார்வதி பரமேஸ்வரன் சொன்னார்களாம்..இவர் நியமித்தாராம்..உள்ளத்திலே கூட இவர்களிடம் தூய்மை இல்லை..வார்த்தையில் கபடம்..சுகபோக வாழ்க்கை..கோடிகளில் புரளும் ஆசாமிகள்..நாவை கட்டுப்படுத்த இயலாதவர்கள்..வெளியில் தெரிவது ஒருமுகம் மட்டுமே...ஹ்ம்ம்ம் அதற்க்கு பின்னால் பாருங்கள்...சிடி போட்டு பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்றவர்கள். தொன்மையான ஓர் மதத்தின் கறைபடிந்த அழுக்குகள் இவர்கள்..வெளிவேஷம் அத்தனையும்..ஆனாலும் மதத்தின் மீதான நம்பிக்கைகளை இந்த நரிகளின் செயல்பாட்டினால் ( நன்றியுள்ள மிருங்கம் கோபிக்கும் என்பதால் நரியினை) மதத்தின் மீதான நம்பிக்கை ஒருபோதும் குறையாது. விரைவில் இவர்களின் ஆட்டமும் கொட்டமும் அடித்து நொறுக்கப்படும். எதற்கும் ஓர் எல்லை உண்டு..பொறுமைக்கும் சேர்த்தே..Rate it: 214 12 Share this commentthesaapimaani - chennai ,இந்தியா 2012-06-15 10:50:13 IST Report Abuse

உண்மை தான், அணு கூட அரசியல் இல்லாமல் இயங்காது. எதை முன் நிறுத்தி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தார்களோ அதை இன்னும் நிறைவேற்ற வக்கு இல்லை. ஒருபக்கம் நாதீகத்தையும் மறு பக்கம் ஆன்மீகத்தையும் அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காயாக வைத்து தான் வெற்றி பெற்றதை தவிர இன்றைய ஆட்சியாளர்களும் சரி நேற்றைய ஆட்சியாளர்களும் சரி உருப்படியாக ஒன்றும் செய்ய வில்லை. அரசியல் சுய லாபத்திற்காக ஒரு சில நடவடிக்கைகள் அதுவும் எதிரியை பழி வாங்கும் நோக்கத்தில் மட்டுமே தனது அதிகாரத்தை பயன் படுத்தியிருக்கிரார்களே தவிர வேறு ஒரு பலனும் இல்லை. களைகள் நாட்டாண்மை செய்யும் வயலில் பயிர்கள் எப்பிடி வளரும். பயிர்களும் களைகளாகத்தான் மாறும் என்பதற்கு இது நல்ல எடுத்துகாட்டு. மூட நம்பிக்கையை வேரருப்பதாக சொல்லி சொல்லியே ஆன்மீகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். ஆன்மீகத்தை எதிர்த்தால் தான் நமக்கு பிழைப்பு என்று நினைத்து நாத்தீகத்துக்கு தீனி போட்டு வளர்த்தார்கள். நாத்தீகம்.... ஆன்மீகத்தை வென்றது அரசியல் ரீதியில் தனது அரசியல் பலத்தால், ஆனால் மூட நம்பிக்கை...... நாத்தீகத்தை வென்றது. இதில் ஒருவர் மாற்றி ஒருவர் மார் தட்டிக்கொள்வதிலும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதிலும் ஒன்றும் குறைச்சலில்லை....

Rate it: 1 0 Share this comment shankar Venkataraman - Chennai,இந்தியா 2012-06-15 12:25:43 IST Report Abuse

This mas was a PA to a DMK minister and to swindle the temple properties and the properties of the Adhinam he was given this post........To enjoy retirement benefits he sold the PEEDAM to NITHHYY...

Rate it: 0 3 Share this comment Reply Cancel



KAARTHI - Paris,பிரான்ஸ் 2012-06-15 02:37:22 IST Report Abuse

அப்போ... உள்ள போனாலும் ஒன்னாதான் போவாங்களோ ?...Rate it: 36 11 Share this commentReply Cancel



Thina Thee - Kualalumpur,மலேஷியா 2012-06-15 00:33:10 IST Report Abuse

இவருக்கும் களி சோறு இருக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லைRate it: 52 8 Share this commentbala thangavel - mysore,இந்தியா 2012-06-15 14:09:39 IST Report Abuse

தின்ன தீ, நான் ஆன்மீகவாதியப்பா(???), எனக்கு களியும் ஒன்றுதான்... கண்டதும் ஒன்றுதான். எல்லாம் அவன் செயல்... இந்த உலகம் ஒரு நாடக மேடை... நாமெல்லாம் அதில் நடிகர்கள்... நித்தி எல்லாம் எனது இயக்குனர்கள்... அந்த கடவுளின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று... ஹே, நான் கரெக்டா தான பேசறேன்.... நான் கரெக்டா தானா பேசறேன்... எனக்கு என்னடா ஆச்சி... நல்ல தானே இருந்தேன்... ஐயையோ... ஆள விடுங்கப்பா.....

Rate it: 1 0 Share this comment Reply Cancel



K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா 2012-06-15 00:27:26 IST Report Abuse

எங்கியோ இடிக்குதே..Rate it: 35 3 Share this commentReply Cancel



Adhi Baskar - salmiya,குவைத் 2012-06-15 00:25:38 IST Report Abuse

உமக்கும் ஞான சம்பந்தர் விரைவில் "பலன்" கொடுப்பார் கவலை படாதேRate it: 67 7 Share this commentReply Cancel



Amanullah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2012-06-15 00:08:37 IST Report Abuse

இதனை படிக்கும் பொழுது காங்கிரசோடு எங்களுடைய உறவில் மாற்றம் இல்லை என ஐயா அவர்களின் அன்றாட கூற்று தான் ஞாபகத்துக்கு வருகிறது...Rate it: 77 9 Share this commentReply Cancel





Tuesday, June 12, 2012

தினமலத்தின் சமூகத் தொண்டு




தினமலத்தில் அன்புடன் அந்தரங்கம் பகுதியில் அநாகரீகமான கற்பனைக் கதைகளை எழுதுவது வழக்கம் என்றாலும், ஜூன் 10  2012 தேதியிட்ட வாரமலரில் வந்துள்ள அநாகரீகக் கதை தினமலத்தின் தரத்தைக் காட்டுகிறது.




அன்புள்ள சகோதரிக்கு —
எனக்கு வயது, 38. என் மனைவிக்கு வயது, 24. எங்களுக்கு திருமணமாகி, எட்டு மாதங்கள் ஆகின்றன. நான் ராணுவத்தில் பணி செய்து, சமீபத்தில் ஓய்வு பெற்று, வங்கி ஒன்றில், இரவு நேர காவலர் பணி செய்கிறேன். என்னுடைய சகோதரிகளின் திருமணம் நடத்த வேண்டிய காரணங்களால், என்னுடைய திருமணம் மிகவும் தாமதமாகவே நடந்தது. மனைவி, தற்போது கர்ப்பிணியாக உள்ளாள்.
நான் திருமணம் செய்தது, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில். மனைவியின் தாயார், எங்களுக்கு தூரத்து உறவினர்; எனக்கு சகோதரி முறையும் கூட. அவர் தன்னுடைய, 15வது வயதில், 35 வயதுள்ளவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னுடைய மாமனார், மும்பையில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். அவர் சம்பளம், அவருடைய செலவு மற்றும் அவரது மருந்து, மாத்திரைக்குத்தான் சரியாக இருக்கும்.
ஒரு வாரம் வீட்டில் இருப்பார்; பிறகு மும்பை செல்வார். என் மனைவி பூக்கடை ஒன்றில், வேலை செய்து வருவதால், அந்த வருமானத்தில்தான் தாய், மகளின் காலம் ஓடிக்கொண்டிருந்தது.
நானும் திருமணத்திற்கு பின், மாமனார் வீட்டிலேயே தங்கி@னன். வீட்டில் ஒரே பெண்தான். வேறு துணைக்கு ஆள் இல்லாததால், என்னை வீட்டோடு மருமகனாக்கிக் கொண்டனர். நான், இரவு பணிமுடித்து அதிகாலை, 4.00 மணிக்குதான் வருவேன். மனைவி காலை, பணிக்கு சென்று, இரவு 7.00 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாள்.
மனைவி சென்ற பின், நான் தூங்க ஆரம்பிப்பேன். இதில் என்ன விஷயம் என்றால், பகலில் பெரும்பாலான நேரங்கள், வீட்டில் நான் மாமியாரோடு தான் இருக்கிறேன். ஆனால், அதிகம் பேச மாட்டார்; கூச்ச சுபாவம் உள்ளவர்.
அவருக்கு, என்னை விட, ஓரிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம். ஒரு நாள் மதியம், 2.00 மணி இருக்கும். அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டியிருந்தது, எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு, திரும்பி வரும்போது, எதேச்சையாக அவரது ரூமை பார்த்தேன். அப்போது தான் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தார் போல. "பிரா'வுடன் இருந்தார்.
சற்று நேரம் தடுமாறி, அங்கேயே நின்று விட்டேன். லேசாக திரும்பும்போது, என்னை கவனித்து விட்டார். வெட்கத்தால் முகம் சிவந்து, சற்றே கோபத்துடன் அவசரமாக, துணியால் மார்பை மூடிக் கொண்டார்.
எனக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு வழியாக யோசித்து, "சாரி' சொல்லிவிட்டு, செல்லலாம் என நினைத்து அருகில் சென்றேன். அருகில் சென்றதும், என்னையே, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நரம்புகள் முறுக்கேறி, ஏதோ செய்ய, திடீரென்று கட்டிப்பிடித்து விட்டேன். ஒரு பக்கம் திமிற, என்னுடைய பிடி இறுக, ஒரு யுத்தமே நடந்தது. முடிவில் மிகவும் பலாத்காரமாக, அவருடன் உறவு கொண்டு விட்டேன்.
அந்த சம்பவத்திற்கு பின், நாங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.
மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. பேசாமல், மனைவியை தனியே அழைத்து சென்று விடலாமா என நினைத்தேன். 15 நாள் ஆகியிருக்கும், நானே மாமியாரிடம் பேசினேன். "தப்பு செய்து விட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள். இதற்குமேல், நான் உங்கள் வீட்டில் இருப்பது சரி இல்லை. அதனால் நான், மனைவியை அழைத்துக் கொண்டு, தனிக்குடித்தனம் சென்று விடுகிறேன்...' என்றேன். ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார்.
"தவறை நீங்கள் மட்டும் செய்யவில்லை. இருவருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அதனால், நீங்கள் மட்டும் கவலைப்படத் தேவையில்லை. சம்பவம் யாருக்கும் தெரியலையே. நமக்குள்ளேதான் இருக்கிறது. அதனால், வருத்தப்பட வேண்டியதில்லை...' என்றார்.
எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பிறகு ஒரு நாள் அவரே, என்னை உறவுக்கு அழைத்தார். என்னால் மீறவும் முடியவில்லை; மறுக்கவும் முடியவில்லை; உடன்பட்டேன். இப்படியாக எங்கள் உறவு, நான்கு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பகல்பொழுதில், கணவன், மனைவியாகவே இருக்கிறோம். அதிகாலையில், ஒரு சில மணிகளே, மனைவிக்கு இன்பத்தை கொடுத்துவிட்டு, பகல்பொழுதில் மாமியாருக்கு கணவராக, எத்தனை நாள்தான் இருக்க முடியும்?
அவரிடம் கேட்டால், "இப்படியே இருக்கட்டுமே; யாருக்கும் தெரிந்தால்தானே அசிங்கம். தெரியாமல் பார்த்துக் கொள்வோம்...' என்கிறார். "நீங்களும், மகளும் தனியே சென்று விட்டால், தற்கொலை செய்து கொள்வேன்...' என, மிரட்டுகிறார். இந்த பிரச்னையிலிருந்து, நான் எப்படி மீள்வது. மனைவியிடம் உண்மையை சொல்லி விடலாமா அல்லது மாமனாரையும் அழைத்து, வீட்டோடு வைத்துக் கொள்ளலாமா?
சகோதரியாகிய நீங்கள்தான், இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்.
— இப்படிக்கு
உங்கள் சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு— 
உங்கள் கடிதத்தை வாசித்தேன். திருமணத்தின் போது, உங்களுக்கு வயது, உங்களது மனைவி வயதை விட, 14 வயது அதிகம். உங்கள் மாமனாரின் வயதோ, உங்களின் மாமியார் வயதை விட, 20 வயது அதிகம்.
பொதுவாக திருமணங்களில், ஆணின் வயது பெண்ணின் வயதைவிட, 3லிருந்து, 5 வரை அதிகமிருக்கும். சமவயதினர் கூட மணம் செய்து கொள்கின்றனர். சில சமயங்களில், மணமகனை விட, இரண்டொரு வயது அதிகமாக கூட மணமகள்கள் அமைந்து விடுகின்றனர்.
வயது வித்தியாச திருமணங்கள் பல, காமவிகாரங்களையும், சில பல <உறவு மயக்க குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. உங்கள் வாழ்க்கையிலும், அதுதான் அரங்ககேறியுள்ளது. நாட்டைக் காப்பாற்றும் பணியில் இருந்த நீங்கள், உறவுமுறை பவித்திரங்களை நாசப்படுத்தி உள்ளீர்கள்.
மாமியார் உங்களுக்கு தூரத்து உறவினர், சகோதரி உறவுமுறையும் கூட. மாமியார் என்பவர், இன்னொரு தாய்க்கு சமம். அந்த உயரிய உறவுமுறையை கொச்சைப்படுத்தியுள்ளீர்கள்.
மாமியார் குளித்துவிட்டு ஆடை மாற்றுவதை தற்செயலாகப் பார்த்துவிட்ட நீங்கள், என்ன செய்திருக்க வேண்டும்? மின்னல் வேகத்தில், அக்காட்சியமைப்பிலிருந்து விலகி, உங்களது அறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், சாரி சொல்வதாக நெருங்கி, அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறீர். இதன் மூலம், மாமியாரை வலுக்கட்டாயமாக சேற்றில் தள்ளி, சேற்றில் புரள்வதை ரசிக்க செய்து விட்டீர். நீங்கள், கட்டின மனைவிக்கு மட்டுமல்ல, சொந்த பந்தங்களுக்கும், சமூக கட்டமைப்புக்கும் கூட, நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்கள்.
தவறுசெய்த, 15 நாட்களுக்கு பின், மனம் உறுத்தி, தனிக்குடித்தனம் போக முடிவெடுத்திருக்கிறீர். இது பற்றி மாமியாரிடமும் பேசியிருக்கிறீர். இந்த பேச்சு கூட, உள்நோக்கத்தோடு கூடிய நாடகம் தான். மாமியாரின் உள்ளக்கிடக்கையை ஆழம் பார்த்திருக்கிறீர். மாமியாரிடமிருந்து நீங்கள் விரும்பின கறுப்பு பதில் கிடைத்திருக்கிறது. கள்ள உறவை, அதே வீட்டிலேயே இருந்து தொடர பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் அத்தை. "மீறி தனிக்குடித்தனம் போனால், தற்கொலை செய்து கொள்வேன்...' என மிரட்டும் அளவிற்கு, கள்ள உறவில் ருசியும் கண்டுவிட்டார் அவர்.
கர்ப்பிணி மனைவிக்கும், இளமை ஊஞ்சலாடும் அத்தைக்கும் இடையே கிடந்து திண்டாடுவதாய் உங்கள் கடிதம் கூறுகிறது.
இனி, பிரச்னைக்கான தீர்வை யோசிப்போம் சகோதரரே!
மனைவியிடம் உண்மையைக் கூறினால், உங்களை காறித் துப்புவாள், திருமண பந்தத்திலிருந்து விடுபடயத்தனிப்பாள். பெற்ற தாயே, சக்களத்தியாக வருகிறாளா என்று, தாயாரின் மேல் மண்ணை வாரித் தூற்றுவாள், இது தேவையா?
அத்தையிடம் அனுமதி கேட்காமல், நீங்களும், உங்களது மனைவியும் தனிக்குடித்தனம் போவது நல்லது. மும்பையில் டேரா அடிக்கும் மாமனாரை, மருத்துவ பிரதிநிதி வேலையிலிருந்து நிற்கச் சொல்லி, வீட்டையும், அவரது மனைவியையும் கவனிக்க நைச்சியமாக ஏற்பாடு செய்யுங்கள்.
தற்கொலை அச்சுறுத்தல் கண்டு பயப்பட வேண்டாம். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும், 90 சதவீத மக்கள், தற்கொலை செய்து கொள்வதில்லை.
பெற்ற தாயோ, உடன்பிறந்த சகோதரியோ ஆடை மாற்றுவதை பார்த்திருந்தால், தவறாக நடந்திருப்பீரா? நிச்சயம் மாட்டீர். இந்த தெளிவு, அத்தை விஷயத்தில் ஏன் இல்லை? பொருந்தா காமம், உறவுநிலை மீறிய காமம் அருவருப்பானது. இதை நீங்கள், இனி ஆயுளுக்கும் தவிர்க்க வேண்டும். மாமியாருக்கு மகனாய், மருமகனாய் இருங்கள்! உறவுகளில் புனிதத்தை பேணி காப்போம் சகோதரா!
நாளை, மகனோ, மகளோ பிறக்கும் வேளை, சேவல் குணத்தை விட்டொழித்து, நல்ல தந்தையாய் மறு அவதாரம் எடுங்கள் சகோதரரே!
— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.
*** 

Saturday, May 7, 2011

தினமலத்தின் சுவாரசியமான நிகழ்ச்சி

தினமலத்தில் பொதுவாக இது போன்ற அநாகரீகமான கருத்துகளை பலமுறை பார்த்திருக்கிறேன்.
கீழ்கண்ட "கதையை" தினமலம் பலமுறை மறு பதிப்பு செய்துள்ளது.





அந்துமணி பா.கே.ப.
பதிவு செய்த நாள் : மே 08,2011,00:00 IST
கருத்தை பதிவு செய்ய
கோவையிலிருந்து வாசகர், ஒருவர் சுவையான நிகழ்ச்சி ஒன்றை எழுதி இருந்தார். இதோ அவரது கடிதம்...
ஒரு நிகழ்ச்சி... நடந்து பல வருடங்கள் ஆகின்றன. இருந்தாலும், சுவாரசியம் குறையாத நிகழ்ச்சி என்பதால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அப்போது நான் அரசு ஆலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆலையில் பணியாற்றும் அலுவலர், பணியாளர், பொறியாளர், தொழிலாளர்களுக்கு ஆலையே, வீடு வசதி செய்து கொடுத்துஇருந்தது. வீடுகளின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில், மரம், செடி நட்டு பலனை குடியிருப்போர் அனுபவித்துக் கொள்வர்; இது, நடைமுறையில் இருந்த வழக்கம்.
இந்நிலையில், முதன்மை நிலை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் பின்புறம் நிறைய இடம் இருக்கும்; அதில், நிறைய மாமரங்கள் இருந்தன.
"விளையும் பழங்களை அதிகாரிகள் விற்கின்றனர்!' என்ற செய்தி மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் உள்ள முதன்மை நிர்வாகிக்கு சென்றது.
அவர், "அதிகாரிகள் வீட்டில் விளையும் மாம்பழங்களை ஏலத்தில் விட்டு, கம்பெனிக்கு பணத்தை கட்டி விட வேண்டும்!' என்று, ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
இந்தச் செய்தி அதிகாரிகளை எட்டிய போது, அவர்கள் இதை ஒரு கவுரவ பிரச்னையாக எடுத்துக் கொண்டனர். ஒரு சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தி, தங்களை, டி.ஆர்.ஓ., அவமானப்படுத்தி விட்டதாக நினைத்தனர். அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பணியாளர் நல அதிகாரியை முற்றுகையிட்டு வாதாடினர்.
ஒரு வருடம் தாங்கள் கஷ்டப்பட்டு தண்ணீர் விட்டு வளர்த்த மரங்களை, பலன் வரும் போது நிர்வாகம் கையகப்படுத்தி, பழங்களை ஏலம் விடுவது சரியல்ல என்றும், இதே நிலை நீடித்தால், இனி, மரங்களை கவனிக்க மாட்டோம்; அடுத்த வருடம் பழமே அதிகம் இராது என்றெல்லாம் கூறினர்.
அரசியல் செல்வாக்கு உள்ளவர் பணியாளர் நல அதிகாரி; மதிநுட்பம் நிறைந்தவர். அவர் இரண்டாம் நிலை அதிகாரி என்றாலும், முதல் நிலை அதிகாரிகளுக்கெல்லாம் அதிகாரி போல் இருந்தவர். அவர், "இது டி.ஆர்.ஓ., ஆர்டர். நான் ஒன்றும் செய்ய இயலாது. இந்த வருடம் விட்டு விடுங்கள். அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்!' என்று பொறுமையாக எடுத்துச் சொன்னார். அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாக இல்லை; மீண்டும், மீண்டும் வாதிட்டனர்.
கோபமடைந்த அதிகாரி, "ஆமாய்யா... ஒரு வருஷம் கஷ்டப்பட்டு வளத்தீங்க... பலனை அனுபவிக்கணும்; நீங்க சொல்றது நியாயம்தான். ஆனா, நீங்க, 20 வருஷம் கஷ்டப்பட்டு பொண்ணை வளக்கறீங்க... "நாந்தான் கஷ்டப்பட்டு வளர்த்தேன்; அதனால, நான் தான் அவளை கட்டிக்குவேன்...'ன்னு உரிமை கொண்டாட முடியுமா? தளதளன்னு வளர்த்து, எவனோ அனுபவிக்கத்தான்யா கொடுக்கறீங்க. 20 வருஷம் வளர்த்த பொண்ணு மேல கொண்டாட முடியாத உரிமையை, 10 மாசம் தண்ணீர் விட்டு வளத்த மாமரத்துல கேக்கறீங்களாக்கும். போங்கய்யா, வேலையை பாத்துக்கிட்டு!' என்று ஒரே போடாகப் போட்டார்.
என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்துப் போயினர் அதிகாரிகள். பிரச்னை முடிவுக்கு வந்தது. அந்த வருடம் மாம்பழ வருமானம் ஆலைக்கு கட்டப்பட்டு விட்டது.
***

Monday, December 15, 2008

காங்கிரஸ் தலைவி சோனியாவிற்கு எதிராக தினமலம் கக்கிய விஷம்.


காங்கிரஸ் தலைவி சோனியாவிற்கு எதிராக தினமலம் (Dec 16, 2008 online edition) கக்கிய விஷம்.அதாவது காங்கிரஸ் தீவிரவாதத்திற்கு துணை போகிறது என்ற அர்த்தத்தில் எழுதியுள்ளது.

Saturday, December 13, 2008

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: சரத் பொன்சேகா தினமலம் குதூகலிப்பு


தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: சரத் பொன்சேகா தினமலம் குதூகலிப்பு !!
வழக்கம் போல் தினமலம் தனது சிங்கள விசுவாசத்தை காட்டிக் கொண்டது. நேரடியாக சொல்லாமல் வாசகர் கடிதம் (Dec 14, 2008 online edition) என்ற பெயரில் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளது. ஏண்டா மாங்காய் மடையர்களா!! காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்றால் பாகிஸ்தான் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீர் ( அதாவது நாம் Pok என்று அழைக்கும் பகுதி, பாகிஸ்தான் Azad Kasmir என்று அழைக்கும் பகுதி ) பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினையா? pok இல் அவங்க தீவிரவாத முகாம் நடத்தினால் அதை பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்று கூறுவாயா, சொல்லேண்டா ஊத்தவாயா அந்துமணி ?
நமக்கு முக்கியமாக இருக்கும் எந்த பிரச்சினையிலும் தலையிடலாம், அதற்காக அகில உலக அரங்கில் ஆதரவு திரட்டலாம். இப்போது நாம் மும்பை பிரச்சினையில் உலக அரங்கில் ஆதரவு திரட்டவில்லையா ? பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினை-யை பல முறை சர்வ-தேச மயமாக்க முயன்றதும் இதே காரணத்தால் தான். அவர்களுக்கு முக்கியமாக தெரியும் பிரச்சினை-யை அவர்கள் கையில் எடுக்கிறார்கள். நாம் இலங்கை பிரச்சினையில் வாயை மூடிக் கொண்டால் பாகிஸ்தான் Pok -ஐ திருப்பிக் கொடுத்து விடுமா, இல்லை தீவிரவாதிகளை அனுப்புவதை தான் நிறுத்த போகிறதா ?

Wednesday, November 12, 2008

கிட்னி தானம் கேட்கும் கிண்டல் அகதி அல்லது தினமலத்தின் -த்துக்கொழுப்பு.


கிட்னி தானம் கேட்கும் கிண்டல் அகதி அல்லது தினமலத்தின் -த்துக்கொழுப்பு.
நவம்பர் 12 2008 தேதி வாசகர் கடிதம் பகுதியில் தினமலம் கக்கிய விஷமத்தனமான கேலி.

Monday, November 10, 2008

தின மலத்தின் தமிழ் தொண்டு


தினமலம் தமிழ் இனத்திற்கு எதிரான செய்திகளை வாசகர் கடிதம் என்ற பெயரில் வெளியிட்டு அற்ப மகிழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த கடிதத்தில் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு, இந்திய இராணுவம் இனப்படுகொலை செய்கிறது, அதனால் நிதி திரட்டுகிறோம் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று ஒருவர் கேட்கிறார். முதலில் காஷ்மீர் முழுவதுமாக நம்மிடம் இல்லை. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் கவனித்து கொண்டு தான் இருக்கிறது. ஏதாவது காரணம் கிடைத்தால் குரல் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இரண்டாவதாக இந்திய இராணுவம் காஷ்மீர் மீது போர் விமானங்களை அனுப்பி குண்டு வீசவில்லை. மூன்றாவதாக உணவு பொருட்களை தடுத்து நிறுத்தி காஷ்மீர் மக்களை பட்டினி போடவில்லை.
இந்த வேற்றுமைகள் எல்லாம் இருக்கட்டும். ஆனால் இந்த தயிர் வடை லாஜிக், சர்வ தேச விவகாரத்தில் எப்படி செல்லுபடி ஆகும். அதாவது இந்தியா, இலங்கை விவாகரத்தில் தலை இடவில்லை என்றால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தலை இடாதா ? ஒரு நாடு என்பது மக்களால் ஆனது, பெரும் அளவிலான மக்கள் ஒரு பிரச்சினையில் தலை இடுமாறு கூறினால் அதை அரசாங்கம் செய்ய வேண்டிய கடமை உள்ளது. தினமலதிற்கு இதெல்லாம் தெரியும், இருந்தாலும் மக்களை முட்டாளாக்க இது போன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.